Monday 16 December 2013

ஓரின சேர்க்கைக்கு சோனியா காந்தி ஆதரவு

ஓரின சேர்க்கைக்கு சோனியா காந்தி ஆதரவு

ஓரின சேர்க்கைக்கு ஆதரவு தெரிவித்து டெல்லி உயர் நீதி மன்றம் 2009இல் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதி மன்றத்தில் சிலர் மனு தாக்கல் செய்தனர். இதை ஆய்வு செய்த உச்ச நீதிமன்றம் இந்திய தண்டனை சட்டம் 377இன் படி ஓரின சேர்க்கை கொள்வது கிரிமினல் குற்றம் இந்த குற்றத்துக்கு ஆயுள் தண்டனை விதிக்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியுள்ளார் நீதிபதி சின்கா.

ஓரின சேர்க்கை உரிமை குறித்து டெல்லி உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் தலைகிழாய் மாற்றி இருப்பது எனக்கு ஏமாற்றம் அளிக்கிறது.

நமது அரசியல் சாசன சட்டம் வழங்கியுள்ள அடிப்படை மனித உரிமைகளுக்கு மாறான பழமையான, கொடுரமான, நியாமற்ற தீர்ப்பு இது. இதற்க்கு மாற்றாக பாராளுமன்றத்தில் சட்ட திருத்தம் கொண்டுவரப்படும்  என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார்.

 இதை அவரது மகனும் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய துணைத் தலைவருமான ராகுல் காந்தியும் அமோதிதுள்ளார். ஓரின சேர்க்கை என்பது தனி நபர் சுதந்திரம்.. அதை தனி நபர் விருப்பத்துக்கே விட்டுவிட வேண்டும். நமது நாடு சுதந்திரமாக கருத்து தெரிவிப்பதில் புகழ் பெற்றது என்று கூறியுள்ளார்.
உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு தவறானது ஏமாற்றம் அளிக்கிறது. இதை சரி செய்வதற்கான வாய்ப்புகள் ஆராயப்படும். இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்ய சீராய்வு மனுவை மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும். அதை 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்க வேண்டும். இந்த விவகாரத்தில் தற்போதைய சமுக நல்லொழுக்க மதிப்பீடுகளை உச்சநீதிமன்றம் கவனத்தில் கொண்டி ருக்க வேண்டும் என்று மத்திய நிதி அமைச்சர்  ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

இவர்களின் இந்த அறிக்கைகளை   பார்க்கும் போது ஓ  இவர்களும் அவர்கள் தானோ என்று எண்ணத்தோன்றுகிறது.

என்ன தான் இருந்தாலும் ஒரு நாட்டை ஆளக்கூடிய பொறுப்பில் இருக்கின்ற இவர்கள் இப்படியெல்லாம் கருத்து  சொல்லக்கூடாது. அதுவும் நாட்டில் இப்போது காங்கிரஸ் கட்சிக்கு இருக்கும் மக்கள் செல்வாக்கில் இப்படி யெல்லாம் பேசினால்......  நல்லா  இருக்கிற மக்கள் எல்லாம் எப்படி ஓட்டு  போடுவாங்க. 
ஓரின சேர்க்கை தொடர்பான தீர்ப்பை காங்கிரஸ் கட்சி வரவேற்றுள்ளதை கண்டிக்கும் தினமலரின் கேலிசித்திரம்.

ஓரின சேர்க்கையாளர்கள் நிறைய பேர் இருந்து அவங்களுக்காக குரல் கொடுத்தா ஏதோ கொஞ்சம் அரசியல் பண்ணலாம். இவங்க ஆயிரத்தில் ஒருத்தர் கூ ட இல்லையே.  அப்போ எதற்காக இவர்கள்  பேசனும் .

என்னமோ டெல்லியில ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவு தெரிவிக்கிற மாதிரி இதற்கும் எங்கள் ஆதரவு என்று சொன்னால் மக்கள் ஒட்டாலே அடிப்பார்கள்.  நாட்டை விட்டு ஓட ஓட அடிப்பார்கள். பாத்து பேசுங்க தலைவர்களே.

எல்லாம் அப்படித்தான் அழிவுகாலம் என்று வந்தால் இப்படித்தான். வாயை  கொடுத்து வண்ணான் கேட்டுபோனான் என்கிற கதை தான்.

இனிமேலாவது கொஞ்சம் யோசனை பண்ணி பேசுங்க.


No comments:

Post a Comment