ஊழலுக்கு எதிரான வலுவான லோக்பால் மசோதா வேண்டும் என்பதை வலியுறுத்தி அண்ணா ஹசேரா சாகும் வரை உண்ணாவிரதம் என்று தனது போராட்டத்தை பலமுறை நடத்தி கா ட்டிவிட்டார். இருந்தாலும் அவர் தனது போராட்டத்தை கைவிட்டதாக தெரியவில்லை. பாராளுமன்றம் பரப் பரப்பாக இயங்கி கொண்டிருந்த இந்த சூழலில் மீண்டும் தனது தொடர் போராட்டத்தை தொடங்கினார்.
இந்நிலையில் நீண்ட இழுப்பரிக்கு பிறகு ஒருவழியாக அரைகுறையாக இந்த மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. அண்ணா ஹசேரா வும் ஒரு வழியாக தனது போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்துவிட்டார்.
ஊழலுக்கு எதிராக ஒரு மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த நிலையில் கோப்ராபோஸ்ட் என்கிற இணையதளம் பாராளுமன்ற உறுப்பினர்கள் 11 பேர் ஊழலில் ஈடுபட்டுள்ளதை படம் பிடித்து கட்டியுள்ளது.
இல்லாத ஒரு கம்பெனிக்கு சிபாரிசு கடிதம் கொடுப்பதற்கு ரூபாய் 50,000 முதல் 50 இலட்சம் வரை லஞ்சம் கேட்ட செய்தி அனைவரையும் அச்சப் படுத்தியுள்ளது. இந்த லஞ்ச ஊழல் ஆபரேஷனை நடத்தி படம் பிடித்து கட்டியுள்ளது கோப்ராபோஸ்ட்..
ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்த மேடிடோட்ரன்ஸ் ஆயில் கம்பெனி என்கிற இல்லாத கம்பனியின் பிரதிநிதிகள் என்று சொல்லிக் கொண்டு உள்ளே நுழைந்த இவர்கள் 11 பேர் லஞ்சம் வாங்கியதாக சொன்னாலும் அதில் குறிப்பிட்ட ஒரு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவரை மட்டும் குற்றவாளிகளாக கட்டுவது என்ன நோக்கம்.
இல்லாத ஒரு கம்பெனியின் பெயரில் இவ்வளவு பணம் கொடுத்து கடிதம் வாங்க வேண்டியதன் அவசியம் என்ன?
ஒருவரை ஊழல்வாதி என்று கட்டுவதற்கு எத்தனையோ வழிகள் இருக்கும் பொது இவ்வளவு பணத்தை விளையாட விட்டிருபது ஏதோ சதி விளையாட்டின் பின்னணி இருப்பதாகவே தெரிகிறது.
இல்லை சில பிளாக் மெயில் பத்திரிகையாளர்களை போல் இணையத்தில் இருப்பவர்களும் இதை காட்டி பணம் பறிக்கும் நோக்கத்தோடு இதுபோன்ற செய்திகளை வெளியிடுகிறர்களா என்றும் எண்ணத் தோன்றுகிறது.
இது ஒரு வகையில் அந்த இணையத்திற்கு பரபரப்பான செய்தியாக கூட இருக்கலாம்.இருந்தாலும் இதனால் எல்லாம் ஊழலை ஒழித்து விட முடியாது. லஞ்சம் வாங்குபவர்கள் எப்போதும், எங்கேயும், எப்படியும் வாங்கிக்கொண்டு தான் இருப்பார்கள். அதை அவ்வளவு எளிதாக மாற்ற முடியாது.
பாராளுமன்றத்தில் லோக்பால் மசோதாவை நிறைவேற்றவே இவ்வளவு காலதாமதம் செய்த இவர்களா இந்த ஊழல் எம்பிக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க போகிறார்கள்.
எல்லா சட்டமும் மக்களை ஏமாற்றதான்.
No comments:
Post a Comment